July 16, 2026
இலங்கை

நாகமுத்து பிரதீபராஜாவுக்கு கிடைத்த பெரும் கௌரவம் யாழ் மைந்தன் பேராசிரியர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.நிகழ்வின்போதே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இலங்கைணின் வானிலை தொடர்பில் அண்மைய காலங்களில் முக்கியமான பல முன்னறிவிப்புகளை கணித்து மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டித்வா சூறாவளி காலப்பகுதியில் இடம்பெறவுள்ள அனர்த்தங்கள் மட்டுமின்றி இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர்பான முன் எச்சரிக்கைகளையும் வழங்கியிருந்தார்.இதன்படி அண்மையில் திருகோணமலை முல்லைத்தீவு கடற்பரப்புகளில் 3.5 ரிச்டர் அளவில்  நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது. 

Related posts

கைதியின் உடலை ஏற்க உறவினர்கள் மறுப்பு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்திய

finhelvantaan

இராணுவ சிப்பாய் பலி சுவர் இடிந்து விழுந்ததில் 

finhelvantaan

பாடகர் சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு PTA நீக்கம்

finhelvantaan

Leave a Comment