நாடளாவிய ரீதியில் மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகள் தங்களின் நிவாரணங்கள் மூலம் தமது ஆதரவை காட்டிவருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தான் அரசிடம் இருந்து நேற்றைய தினம் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிவாரணப்பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக பலர் தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பொதியில் காணப்படும் காலாவதி திகதியும் 2024ஆம் ஆண்டுடன் நிறைவடைவதையும் வட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
