இன்று (15) வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட ஹர்த்தால் போராட்டம் தேவையற்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) அண்மையில் வடக்கிலும், கிழக்கிலும் இன்று ஹர்த்தால் நடைபெறும் என அறிவித்திருந்தது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஹர்த்தாலுக்கு எந்த காரணமும் இல்லை என்றார்.
“அவர்கள் ஹர்த்தால் நடத்துவார்கள் என்கிறார்கள், ஆனால் அதற்கு எந்த காரணமும் இல்லை. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

