அநுர குமார திசாநாயக்க இன்று சீன ஜனாதிபதி

 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.�

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவிற்கு 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *