முதலை ஒன்றின் செயல் இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தண்ணீருக்குள் முதலை ஒன்று மூழ்கியவாறு தன்னுடைய கைகளை மட்டும் மேலே உயர்த்தி சைகை செய்கிறது.
இவ் விடயம் தொடர்பில் பிரதேச வாசிகள், “மனிதர்களை அழைப்பதற்காக முதலை செய்யும் தந்திரமே இது, தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் யாரோ ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்கள் என நினைத்து அவர்களைப் காப்பாற்ற செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போது, உண்மையில் அங்கு மனிதர்கள் இருக்கமாட்டார்கள், மாறாக முதலை இருந்து அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடிவிடும்.” என விளக்கம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்த முதலை நிபுணர்கள்,இப்படி ஒரு தந்திரத்தை முதலை செய்யும் என்பதை நாங்கள் நம்பவில்லை. அது இரையை வாயில் வைத்திருக்கும் நேரத்தில் கைகளை தண்ணீருக்கு மேலே உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.
