துருக்கியில் தேவாலயம் மீது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை குறிவைத்து காரில் இருந்த சந்தேக நபர்கள் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது அங்கிருந்த சங்க கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டியுள்ளனர்
குறித்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தாக்குதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்
