அமெரிக்காவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என அந்நாட்டின் டொனால்ட் டிரம்ப்

trumpwarnsiran-1749990476.jpg

இஸ்ரேல் ஈரான் இடையேயான தாக்குதல் தொடரும் சூழலில் இரு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே இந்தத் தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என அந்நாட்டின் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஒருவேளை அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தனை காலம் இஸ்ரேல்

தன்னை சுற்றி இருக்கும் நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகள் உடன் தான் மோதலில் ஈடுபட்டு இருந்தது. ஆனால், இப்போது இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் உலக அரங்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது பேரழிவு அதேநேரம் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும் சிலர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதைத் திட்டவட்டமாக

மறுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதேநேரம் ஈரானுக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார். ஒருவேளை அமெரிக்கா தாக்குதலை நடத்தினால் அது பேரழிவையே ஏற்படுத்தும் என அவர் கூறியிருக்கிறார். பின்னணி நேற்று சனிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையேயான தாக்குதல் தீவிரமடைந்தது. தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை இஸ்ரேல்

குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. மேலும், பாரசீக வளைகுடா அருகே உள்ள ஈரானுக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியது. டிரம்ப் மிரட்டல் இந்தத் தாக்குதலுக்குத் தான் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதைத் தான் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதலை எளிதாக முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்கச் சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி தரப்படும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

The current image has no alternative text. The file name is: trumpwarnsiran-1749990476.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *