நைஜீரியாவின் மோக்வா நகரை ஏற்பட்ட வெள்ளத்திற்கு 700 பலியானதாக தகவல்

25-683e666c7197d-md.webp

நைஜீரியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் சுமார் 700 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

200க்கும் அதிகமாக
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரை ஏற்பட்ட வெள்ளத்திற்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளம் என்று கூறப்படுகிறது.

கொடிய வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாரையும் உயிருடன் கண்டுபிடிக்க முடியாது ஆனாலும், மத்திய நைஜர் மாநிலத்தின் நகரில் இன்னும் 500 பேர் காணவில்லை என்பதால், மொத்தமாக 700 பேர் பலியாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து உள்ளூர் அதிகாரி மூஸா கிம்போகு கூறுகையில், “மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், அதிகாரிகள் இன்னும் யாரையும் உயிருடன் கண்டுபிடிக்க முடியாது என்று நம்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார். மோக்வா மாவட்டங்களான டிஃபின் மசா மற்றும் அங்குவான் ஹவுசாவா வழியாக வெள்ளம் பாய்ந்ததால், இப்பகுதியில் நோய்களைத் தடுக்கும் முயற்சியாக நிலத்தடியில் புதைக்கப்பட்ட சடலங்களை அதிகாரிகள் விரைவில் மீட்பார்கள் என்று மோக்வாவின் மாவட்டத் தலைவர் முஹம்மது அலியு தெரிவித்தார்.

The current image has no alternative text. The file name is: 25-683e666c7197d-md.webp

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *