ஸ்கேன் செய்த போது 8.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மும்பை விமான நிலையத்துக்கு கென்யாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிக்லோஸ் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரின் பைகளில் சோதனை நடத்தினர். அதில் எதுவும் இல்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்த போது 8.5
�
கோடி மதிப்புள்ள பொருள் வயிற்றில் இருந்ததை கண்டுபிடித்தனர்.இந்தியாவின் மிகமுக்கியமான விமான நிலையங்களில் மும்பை விமான நிலையமும் ஒன்று. இந்தியாவில் மிக அதிகவிமானங்கள் வந்து செல்லும் விமானங்களில் ஒன்றாகவும், 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாகவும் மும்பை விமான நிலையம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 920 விமானங்கள் வரை வந்து செல்லும் திறன் உடையது மும்பை விமான நிலையம்.இங்கு ஏராளமான வெளிநாட்டு விமானங்களும்,
�
உள்ளூர் விமானங்களும் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு கடத்தல் பொருட்களை கடத்தி வருகிறார்கள். அவர்களை கண்காணிக்க மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகிறார்கள்.அந்த வகையில் மும்பை விமான நிலையத்துக்கு கென்யாவில் இருந்து வந்த விமான
�
பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது நிக்லோஸ் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அதிகாரிகள் அவரின் பைகளில் சோதனை நடத்தினர்.ஆனால் சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் பறிமுதல் அவரிடம் கிடைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவரை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அப்போது வயிற்றில் விழுங்கி போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
�
இதையடுத்து மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாரிகள் அந்த பயணி வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த 50 கொகைன் போதைப்பொருள் கேப்சூல்கள் எடுக்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ.8 கோடியே 65 லட்சம் ஆகும். இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
