மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை (01) மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுள்ள உணவகங்களுக்கு இது பொருந்தாது என மதுவரித் திணைக்களம் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
