இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் குறித்த சொத்து மோசடி தொடர்பாக கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
