சம்மாந்துறை பகுதியில் வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணிடம் இருந்து சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்ற கசிப்பு
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று (27) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 12,000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.இதன் போது வீரமுனை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவரையும் ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதான பெண் மற்றும் சான்றுப் பொருட்களை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
