அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

images-56.jpeg

இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கும் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகிவுள்ளதுடன், நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) உறுதிப்படுத்தி செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று அதிகாலை 2:25 மணிக்கு 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக சேதம் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த 25 ஆம் திகதி அதிகாலையில் வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்கு முன்பு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *