சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகளுக்கு 4 வருட சிறைத்தண்டனை

download-1-53.jpeg

கொலை வழக்கு சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகளுக்கு 4 வருட சிறைத்தண்டனை.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொ*லை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து.
இந்த வழக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *