ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்

download-8-3.jpeg

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை வலியுறுத்தி பெப்ரவரி 8 ஆம் திகதி காலை கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியை எதிர்த்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறியக்கிடைத்துள்ளது.

கட்சியின் அரசியல் வட்டாரங்களின்படி, இந்தப் போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, பிரசாத் சிறிவர்தன மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை பின்வரிசை எம்.பி.க்கள் எதிர்க்கின்றனர் என்ற வதந்திகள் பொய்யானவை என்று கூறுகிறார்.

இந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இரு கட்சிகளிலும் உள்ள மிகச் சிறிய குழுவினர் மட்டுமே தங்கள் குறுகிய நலன்களுக்காக இரு கட்சிகளும் இணைவதை விரும்பவில்லை என்றும், அந்தக் குழுவின் எதிர்ப்பையும் மீறி, நாட்டின் நலனுக்காக இரு கட்சிகளும் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *