யானை துரத்தியதில் மின்கம்பியில் பட்டதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது மட்டக்களப்பு பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தெரிய வருவது வயல் காவலுக்கு சென்றவேளை இன்று (03) ஆம் திகதி அதிகாலை 02.00 மணியளவில் யானை துரத்தியதில் மின்கம்பியில் பட்டதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் – சீராளசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பன்சேனையை பிறப்பிடமாகவும் முதலைகுடாவை வசிப்பிடமாக கொண்டவர் ஆவார்.
