சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்தாண்டு 80 கோடி அதிகம்.

images.jpeg

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்தாண்டு வருமானம், 400 கோடி ரூபாய் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 80 கோடி அதிகம்.சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியிலிருந்து மாதம் ஐந்து நாட்கள் திறக்கப்படும் கார்த்திகை மாதம், முதல் தேதி நடை திறந்து தை மாதம் மூடப்படும். மகர விளக்கு, மண்டல பூஜை சீசன் என்றழைக்கப்படும் இந்த இரு மாத சீசனில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வர்.

இந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்களின் வருகை மிக அதிகம். கடைசி மூன்று நாட்கள் ‘ஸ்பாட் புக்கிங்’கை நிறுத்தும் அளவிற்கு பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சபரிமலை சீசனில் வருவாய், 440 கோடி ரூபாய் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட, 80 கோடி ரூபாய் அதிகம். கடந்தாண்டு வருமானம், 360 கோடி ரூபாய்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *