31.7 C
Chennai
March 13, 2026
இலங்கை

வேலணை பிரதேச சபை உறுப்பினர் வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு

50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன

வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.

வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அப்போதைய யாழ் . மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்போதைய வடமாகாண ஆளுநர் , அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவருக்கும் எதிராகவே நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

உலகில் முதலில் தோன்றிய விலங்கு டைனோசர் இல்லை நமது மூதாதையர்கள்

finhelvantaan

கொக்கரிக்கும் இஸ்ரேல் பிரதமர் ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் படுகொலை உறுதி

finhelvantaan

 புதிய திகதிகள் அறிவிப்பு! A/L பரீட்சைக்கு

finhelvantaan

Leave a Comment