போலி சாமியார் யாழ் வருகை தர உள்ளார் மக்களை உஷார்

images-1-2.jpeg

அன்னபூரணி  தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறிகொண்டிருக்கும் இந்தியாவின் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான அன்னபூரணி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு
அவரின் வருகைக்கு யாழில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

தமிழ் நாட்டின் திருவண்ணாமலையில் ஆச்சிரமம் நடத்தும் அன்னபூரணி தான் ஆதிபாராசக்தியின் வடிவம் என பலருக்கும் ஆசி வழங்கி வருகின்றார்.தனது தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அன்னபூரணி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

The current image has no alternative text. The file name is: images-1-2.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *