ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை நிபந்தனையின்றி சரணடையுங்கள்

அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்,” என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்து உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கக்கூடாது என அமெரிக்கா கூறி வருகிறது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரானின் உச்ச தலைவர் என அழைக்கப்படும் அயதுல்லா காமெனி எங்கு மறைந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு. ஆனால், அவர் பாதுகாப்பாக இருக்கட்டும்.குறைந்தபட்சம் தற்போதைக்கு அவரை கொல்லப்போவதுகிடையாது. ஆனால், சாமானிய மக்களையோ, அமெரிக்க வீரர்களையோ ஏவுகணைகளை தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களது பொறுமை குறைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு நன்றி.நிபந்தனையின்றி சரணடையுங்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *