நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு 100 பேர் பரிதாப பலி பலர் மாயம் நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 100 பேர்
�
கொல்லப்பட்டனர். பலர் மாயம் ஆகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் போதுமான மருத்துவ வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.இந்த பதட்டங்கள் பெரும்பாலும் இன மற்றும் மதப் பிளவுகளால் மோசமடைகின்றன. கடந்த மாதம், நைஜீரியாவின் க்வெர் வெஸ்ட் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் நடந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
�
கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 500 பேர் உயிரிழந்தனர். 22 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
