துப்பாக்கி செயலிழந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர் கொழும்பு மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை 13 இரவு இனந்தெரியாத இருவர் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றுள்ள நிலையில் துப்பாக்கி செயலிழந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் துப்பாக்கி வெடிக்காத காரணத்தால் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதாரிகள் இருவரும் தப்பிச் செல்லும்போது அவர்களிடம் இருந்த தோட்டா ஒன்று தரையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
