யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் நேற்று 13 இரவு வன்முறை கும்பலினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை ஒரு சில மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
