ஈரானு உடனா மோதலுக்கு நடுவே இஸ்ரேல் வெளியிட்ட மேப் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்தியாவிடம் இஸ்ரேல் மன்னிப்பு கோரியுள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று இஸ்ரேல், ஈரான் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. அணு
�
ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், ராணுவத்துக்கு சொந்தமான சுரங்க தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருகிறது. இருநாடுகள் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் உருவாகும்
�
சூழல் உருவாகி உள்ளது.இந்நிலையில்தான் தான் ஈரான் இஸ்ரேலுக்கு மட்டுமில்லை. மொத்த உலகுக்கும் அச்சுறுத்தல் என்பதை காட்டும் வகையில் இஸ்ரேல் ராணுவம் பதிவு ஒன்றை செய்தது. அதில் ஈரானின் ஏவுகணை எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்பது தொடர்பாக இஸ்ரேல் மேப்-பை பயன்படுத்தி இருந்தது. அதில், ‛‛‛‛ஈரான் மொத்த உலகத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேல் இன்னும் தனது
�
இலக்கைஅடையவில்லை. இது தொடக்கம் தான். எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை. பதிலடி கொடுக்க மட்டுமே வாய்ப்புள்ளது” என தெரிவித்து இருந்தது. இந்த பதிவில் இடம்பெற்றிருந்த மேப் தான் சர்ச்சையை கிளப்பியது. அதில் நமக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்பது போலவும், வடகிழக்கு மாநிலங்கள் நேபாளுக்கு சொந்தம் என்பது போலவும் மேப் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
