இஸ்ரவேல் ஒரு யூதர்கள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

diaspora3.jpg

இஸ்ரவேல் ஒரு யூதர்கள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
யூதர்கள் என்று அழைக்கப்படுகிற, இன்றைய இஸ்ரவேலர்களின் வளர்ச்சி:
யூதர்களைப் பற்றி தமிழ் மக்களின் கருத்து:

யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை ஆளுகை செய்கிறவர்கள். இல்லுமினாட்டிகள். உலகினை ஆளப்பிறந்தவர்கள் யூதர்கள் என்ற திமிர் பிடித்தவர்கள்.

பழிவாங்குபவர்கள்.. மோசமானவர்கள்.. வந்தேறிகள். இரத்த வெறி பிடித்தவர்கள். பாலஸ்தீன தேசத்தைப் பிடித்துக்கொண்டு, பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொல்பவர்கள்
இதெல்லாம் YouTube comments களில் நாம் படித்து அறிந்தது. (2 வருடங்களுக்கு முன்பு எடுத்த கருத்துக்கள் இவை. இப்பொழுது இன்னும் மோசமாக இஸ்ரேலைப் பற்றி பேசுகின்றனர்) இவைகள் எல்லாம் நம் தமிழ் மக்கள் கமெண்ட்களில் யூதர்களைப் பற்றிக் கூறிய வார்த்தைகள். உண்மையில் யூதர்கள் யார்? அவர்கள் கடந்து வந்த

பாதைகள் என்ன?
தற்போதைய இஸ்ரேல் (After 1948)
இப்போது இருக்கும் இஸ்ரேல் தேசத்தின் வளர்ச்சிகளை முதலாவது நாம் காணலாம்.
1. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக, தங்களுக்கென்று ஒரு தேசம் இல்லாமல், பல தேசத்திலும் அடிமைப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, அவமானப்பட்டு இருந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு சுய தேசத்தை உருவாக்கி, அதில் இந்த 75 ஆண்டுக்குள்ளாக மாபெரும் புரட்சி செய்து, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருப்பது, இஸ்ரேலின் சிறப்புகளில் மிகச் சிறந்தது.
2. 1948ல் தான் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி, அதை சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்தியதே மே14,1948 தான். அதற்கு அடுத்த நாளே, சுற்றிலும் இருந்த அரபு

நாடுகள் சேர்ந்து, இஸ்ரேலின் மீது போர் தொடுத்தது. அப்போதைய இஸ்ரேலின் மக்கள் தொகை வெறும் ஐந்து லட்சம். சுற்றி இருந்த அரபு நாடுகளின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஆறு கோடி. அதாவது 120 மடங்கு அதிகம் மக்கள் தொகை கொண்ட அரபு நாடுகள், வெறும் ஒருநாள் வயது குழந்தையான இஸ்ரேலை சுற்றி படையெடுத்தது.
இஸ்ரேல் என்ற பெயர், உலக வரைபடத்தில் இல்லாமல் போக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்தப் போரைப் பற்றி விரிவாக வரும் பகுதிகளில் படிக்கலாம்.

ஆனால் அவ்வளவு படைவீரர்கள் சூழ்ந்து நின்ற போதிலும், இஸ்ரேல் தனது படைவீரர்கள் பலரை இழக்கக் கொடுத்தாலும், அந்தப் போரில் வெற்றி பெற்றது. அதுதான் இஸ்ரேல். எட்டு முறை அண்டை நாட்டினருடன் போரிட்டாலும், ஒரு முறை கூட தோற்காத நாடு என்று பெருமையுடன் காணப்படுவது இஸ்ரேல்.
3. பாலஸ்தீனியர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 170 முறை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். யாரிடமும் தோற்றுப் போகாத நாடாக, எதிர்ப்பவர்களின் கண்களில்

விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருப்பது இஸ்ரேல்.
4. படித்தவர்கள் அதிகம் காணப்படும் நாடு இஸ்ரேல். கிட்டத்தட்ட 99 சதவீத பேர் படித்தவர்களாக இருப்பதுடன், அதிக அளவு போஸ்ட் கிராஜுவேட் (PG) முடித்தவர்கள் கூட இஸ்ரேலில் தான் இருக்கிறார்கள்.
5. தனி நாடாக இஸ்ரேல் உருவான பின்னர் 13 பேர் அறிவியலில் நோபல் பரிசு பெற்றுள்ளனர். உலக அளவில் டாப் யூனிவர்சிட்டிஸ் என்ற வரிசையில், முதல் 100

இடத்தில், மூன்று இஸ்ரேலிய கல்லூரிகள் உள்ளன.
6. சாட்டிலைட் சொந்தமாக தயாரித்து அனுப்பும் 10 நாடுகளில், இஸ்ரேலும் ஒன்று. இதுவரை 13 சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. நமது இந்தியா கூட ஒரு சாட்டிலைட் இஸ்ரேலிடம் இருந்து வாங்கி, அதைத்தான் பிற நாடுகளை கண்காணிப்பதற்காக அனுப்பி இருக்கிறோம்.
7. பள்ளிப் பிள்ளைகள் தயாரித்த சாட்டிலைட்டை, வானிற்கு அனுப்பிய முதல் நாடு

இஸ்ரேல் தான். இதிலிருந்து அறிந்து கொள்ளலாம், அவர்களின் குழந்தைகள் எவ்வளவு அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று.
8. குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத நாடு என்றால் அது இஸ்ரேல்தான். ஆனால் அவர்கள் பாலைவனத்தில் கூட விவசாயம் செய்கிறார்கள். எப்படி? கடல் தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராக மாற்றி ,அதைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
9. கழிவுநீரை அதிகமாக மறுசுழற்சி செய்கிற நாடும் இஸ்ரேல்தான். வீடுகளில் இருந்து

வரும் 60% கழிவுநீரும், ஃபேக்டரிகளில் இருந்து வெளிவரும் 85 சதவீத தண்ணீரையும், சுத்திகரித்து, அதிலிருந்து வரும் தண்ணீரை 97% விவசாயத்திற்கு உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்திற்கு அவர்கள் உபயோகிக்கிற நீரில் 55 சதவீத தண்ணீர் Drainage water.

10. தண்ணீரை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள் இஸ்ரவேலர்கள் தான். அவர்கள் தான் சொட்டுநீர் பாசனம் முறையை கண்டுபிடித்தவர்கள்.
11. உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் பிடிப்பதும் இஸ்ரேல்தான். அதிகளவு பால் உற்பத்தி பண்ணுகிற மாடு இஸ்ரேலில் தான் கிடைக்கும்.
12. உலகிலேயே மியூசியம் அதிகம் உள்ள நாடு இஸ்ரேல் தான். உலகிலே அதிக

ஆர்கெஸ்ட்ரா உள்ள நாடும் இஸ்ரேல்தான்.
13. இஸ்ரேல் நாட்டில் மட்டும் 137 பீச் இருக்கிறது.
14. அதிக வரலாற்று சிறப்புமிக்க இடம் கொண்ட நாடு இஸ்ரேல் தான். எருசலேமில் மட்டும் கிட்டத்தட்ட 2000 இடங்கள் வரலாற்று இடங்களாக உள்ளது.
15. உலகிலேயே உயரமான இடம் எவரெஸ்ட் என்பது அனைவருக்கும் தெரியும் (8848m). World lowest point எது என்று கேட்டால், அது இஸ்ரேலில் உள்ள Dead seaதான். 1315m low ஆக இருக்கும். அங்குள்ள உப்புத்தன்மை அதிகம் என்பதால், அதில் சுலபமாக மிதக்க முடியும்.

16. நாம் கையில் வைத்திருக்கிற Smartphoneக்கு Foundation போட்டது இஸ்ரேல் தான். Israelல் உள்ள Motorola company ன் Research and Development engineers, இன்றைக்கு உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு அடித்தளம் போட்டவர்கள்.
17. Google, Apple, Microsoft, Intel இப்படி பெரிய நிறுவனங்களுக்கு Research and Development team இன்றும் இஸ்ரேலில் இருக்கும். டெக்னாலஜியில் அதிகம் பெயர் பெற்ற நாடு

இஸ்ரேல்.
18. ஒரு வருடத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 கடிதங்கள் கடவுளுக்கு (To God) என்று பெயர் போட்டு வரும். இதை டீல் செய்வதற்காகவே ஒரு தனி டிபார்ட்மெண்ட் போஸ்டல் துறையில் உள்ளது.

19. Mount of Olives என்று ஒரு சுடுகாடு இஸ்ரேலில் உள்ளது. இதுவரை அது சுடுகாடாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு இடம் சுடுகாடாக பயன்படுத்தப்படும். பின்னர் அந்த இடம் வேறொரு பயன்பாட்டில் வந்து சேரும். அல்லது வேறொரு பயன்பாட்டில் இருந்த இடம், சுடுகாடாக மாறும். ஆனால் இஸ்ரேலிலுள்ள இந்த ஒரு இடம் மட்டும் , உலகிலே மிகப் பழமையான சுடுகாடு என்ற பெருமையை பெற்றது.

20. மிகப் பழமையான பட்டணங்கள் பட்டியலில், ஜெருசலேமும் ஒன்று. ஆனால் இந்த ஜெருசலேம் இரண்டு முறை முற்றிலுமாக அழிக்கப்பட்ட நகரம். அதே போல 23 முறை எதிரி படையால் சூழப்பட்டிருந்தது. 53 முறை எதிரியால் தாக்கப்பட்டிருந்தது. 44 முறை பிடிக்கப்பட்டுள்ளது. இத்தனையும் தாண்டி இன்றும் எருசலேம் என்ற பட்டணம் அங்கே காணப்படுவது ஒரு சிறப்பு தானே..

இஸ்ரேலின் விநோதமான சட்டங்கள்
1. இஸ்ரேலில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டாயமாக இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ராணுவத்தில் பெண்களைக் கொண்ட நாடு என்ற பெருமையும் இஸ்ரேலுக்கு உள்ளது.
2. நமது குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் அதிக அளவு கார்ட்டூனை தயாரிப்பவர்கள் யூதர்கள் தான். ஆனால் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளை மழுங்கி விடும் என்பதால், 15 வயது வரை

கார்ட்டூன் பார்க்க கூடாது என்ற சட்டம் இஸ்ரேலில் இருக்கிறது.
3. பேருந்து நிலையமாக இருக்கட்டும்… ரயில் நிலையமாக இருக்கட்டும்… எங்கு சென்றாலும் குனிந்த தலை நிமிராமல் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்கும் மக்கள் நாம். ஆனால் இஸ்ரேலில், ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏசி உடன் கூடிய லைப்ரரி உள்ளது. பேருந்துக்காக காத்து நிற்கிறவர்கள், அந்த நேரத்தில் அந்த நூலகத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
4. இஸ்ரேலில் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், அவர்கள் ராணுவத்தில் மிக முக்கிய பொறுப்பாளராக பணியாற்றி இருக்க வேண்டும் என்பது, அங்குள்ள வினோதமான ஒரு சட்டம்.

5. Highway roadல் பைக்கையோ காரையோ நிறுத்தி லிப்ட் கேட்பது மிகப்பெரிய குற்றம். வழிப்பறி கொள்ளைகள் நிகழாமல் தடுக்க இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
6. ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, டிப்ஸ் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் செல்லும் போது உங்களை நிறுத்தி டிப்ஸ் தருமாறு கேட்பார்கள்.
7. இஸ்ரேலில் புகை பிடிப்பது மரண தண்டனைக்குரிய குற்றம். அதில் இருக்கும் நிக்கோட்டின், டிஎன்ஏவில் கலப்பதால், அடுத்த தலைமுறையின் மூளை பாதிக்கப்படும்.

எனவே அவர்கள் பொது இடத்திலோ, வெளியிலோ புகை பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். (இப்பொழுது நன்றாகவே குடிக்கிறார்கள்)
ஆனால் உலகின் மிகப்பெரிய சிகரெட் கம்பெனி ஒரு யூதருடையது. இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்றி முடிக்கும் வீரர்கள், உடனடியாக இந்தியாவுக்கு சுற்றுலா வருவார்கள். இந்தியாவில் உள்ள கோவாவில், ஓய்வு எடுத்தபடி, சிகரெட் புகையை இழுத்து மூச்சு வாங்குவார்கள். அதுதான் அவர்கள் வாழ்க்கையில் முதலாவது பிடிக்கும்

சிகரெட், அதே போல் அவர்கள் வாழ்க்கையில் கடைசியாக குடிக்கும் சிகரெட்டும் இந்தியாவில் தான் குடிப்பார்கள். ராணுவத்தில் பணியாற்றியதால் ஏற்பட்ட மன அழுத்தம், வேலைப்பளு அனைத்தையும் தோற்கடிக்க, இந்தியாவுக்கு சுற்றுலா வந்து, நன்கு ஓய்வெடுத்து விட்டுத்தான், தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் யூதர்கள். (ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.)

யூத பெற்றோர்கள்:
உலக அளவில் பதினைந்து சதவீதம் கூட மக்கள்தொகை இல்லாதவர்கள் யூதர்கள், உலக அளவில் தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் இவற்றில் 70% யூதர்களாகத் தான் இருப்பார்கள். இதற்கு பெற்றோரின் வளர்ப்பும் மிகப்பெரிய காரணம். குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் தாய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இஸ்ரேலில் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு ஆற்றிக் கொண்டிருப்பவர் தாய் என்பதை வெளிப்படையாகக் காணலாம். தன் வயிற்றில் கரு உருவாவது தெரிந்த

உடனேயே, அந்தத் தாய் எல்லா வேலையும் ஒதுக்கி விட்டு, Maths puzzle போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தாயின் மூளை தூண்டப்படும் போது, குழந்தையின் மூளையும் தூண்டப்படும் என்பது அவர்களது எண்ணம். அறிவியல் பூர்வமாக அந்த கருத்தும் சரியே. கரு உருவான உடன், அந்த தாய் தூக்கம் வரக் கூடிய எந்த ஒரு பொருளையும் சாப்பிடாமல், தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் இசை வாசித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சாப்பாட்டிலும் அதிகமாக மீன் எடுத்துக் கொள்வார்கள். மீனும் இறைச்சியும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வது அந்த அளவுக்கு சத்து அல்ல என்று கூறும் யூதர்கள், இறைச்சியை avoid செய்து விட்டு, அதிகமாக மீனைத்தான் சமைப்பர். அதுவும் மீனைப் பொறித்து உண்ணாமல், வேக வைத்துத் தான் சாப்பிடுவர். நிறைய nuts, vegetables எடுத்துக் கொள்வார்கள்.

யூதக் குழந்தைகள்:
குழந்தைகள் சிறு வயதிலிருந்து இசை வாசிக்கப் பழக வேண்டும். கண்டிப்பாக குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கக் கூடாது. 15 வயது வரை உள்ள குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளையைத் தூண்டும் வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்றவை, கட்டாயமாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும். ஆறாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வணிக கணிதவியல் படிப்பு கட்டாயமாக சொல்லித் தரப்படும். அதன் பின்னர் அவர்கள் என்ன துறையில் படிக்க

விரும்புகிறார்களோ, அந்தத் துறைக்கான பாடங்கள் மட்டுமே சொல்லித் தரப்படும். நம்மைப் போல் எல்லா பாடங்களையும் அவர்கள் படிப்பது கிடையாது. போர்த்தளவாடம், மருத்துவம், தொழில்நுட்பம். இதுதான் அவர்களது முக்கிய பாடங்கள். இதை நோக்கித்தான் அவர்களது கவனம் சென்று கொண்டே இருக்கும்.
முக்கியமாக வணிகவியல் எடுக்கும் ஆசிரியருக்கு, அங்கே மரியாதை அதிகம். வணிகவியலில் ஒரு பத்து பேர் சேர்ந்து கூட்டாக இருப்பார்கள். அந்த பத்து மாணவர்களும் சேர்ந்து, ஒரு business செய்து, பத்து மில்லியன் அமெரிக்கன் டாலரை

சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அப்படி சம்பாதித்தால் மட்டுமே அவர்களுக்கு டிகிரி முடித்ததற்கான சான்றிதழ் கொடுக்கப்படும். இதனால் தான் எழுபது சதவீத உலகமே யூதனின் கையில் இருக்கிறது. Cococola, Dell, Apple, Motorola என்று முக்கிய நிறுவனங்கள் யூதனுடையதாகத்தான் இருக்கும்.

மாணவர்கள் பிசினஸ் செய்வதற்கு பணம் தேவை. பணம் யார் கொடுப்பார்கள்? நியூயார்க்கில் யூதர்களுக்கென்று ஒரு வர்த்தக நிறுவனம் உள்ளது. அங்கே போய் மாணவர்கள், ‘எனக்கு இந்த ஐடியா இருக்கிறது. நான் இப்படி ஒரு ப்ராஜெக்ட் செய்யப் போகிறேன்’ என்று சொன்னால், வட்டி இல்லா கடன் அந்த நிறுவனம் கொடுக்கும். அதனால் தான் அவர்களால் அதிக பிசினஸ் செய்ய முடிகிறது.
மருத்துவம் படிக்கிற மாணவர்களுக்கும் கடன் வழங்கப்படும். அவர்கள் மருத்துவர்கள் ஆன பின்பு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, மூன்று வருடங்களுக்குள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும். மூன்று வருடம் முடிந்த பின்னர், அவர்கள் அந்த வட்டி இல்லா கடனைத் திரும்ப செலுத்தலாம்.

The current image has no alternative text. The file name is: diaspora3.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *