அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் ரைசிங் லயன்

collage-1749863644.jpg

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல், ஈரான் மீது நேற்று 13 அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” (Operation True Promise) என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (14) அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

The current image has no alternative text. The file name is: collage-1749863644.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *