இலைகையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கும் அங்கு செல்லவிருப்பவர்களுக்கும் எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலையால் இஸ்ரேலிலுள்ள இலைகையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் செல்ல இருப்பவர்கள் தங்களின் பயணங்களை தாமதப்படுத்த வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரானுக்கிடையில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு இஸ்ரேல் மற்றும் ஈரான் வான்வெளி முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
