பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம்

25-684aa97dc4bb0.jpeg

இரவாக கிழித்து தொங்க விட்டது யார்   முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அண்மையில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம் நேற்று  11 இரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம், முள்ளியவளை கல்லூரிக்கு அருகிலுள்ள தனியார் நிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.இரவோடு இரவாக கிழித்து தொங்க விட்டது யார்?
சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக அங்கு பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் வெசாக் தோரண அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இதில், “மகிந்த தேரரின் இலங்கை வருகை மற்றும் பௌத்த மத ஸ்தாபித்தலும்” எனும் வாசகத்துடன் பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று இரவு இனம்தெரியாத நபர்கள் அந்த பதாதையை கிழித்தெறிந்துள்ளனர். மேலும், பௌத்த தோரணம் அகற்றப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

The current image has no alternative text. The file name is: 25-684aa97dc4bb0.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *