உலகம் முழுவதும் பரவி வரும் COVID-19 வகை நோயால் இலங்கையில் இரண்டு பேர் உயிரிழந்துளதாக வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று 12 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே COVID-19 தொற்றால் இருவர் பலி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வைராலஜி நிறுவனத்தின்படி, இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய COVID-19 வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த COVID-19 தொற்று மிகக் குறைந்த தீவிர நிலையில் உள்ளது.
தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகக் குறைவு. இருப்பினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, இது தீவிரமாக இருக்கலாம்.
அத்தகையவர்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும். இலங்கையில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதைத் தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லாததால் தேவையில்லாமல் பீதி அடையத் தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.
