சிக்கல் தீருவதில்லை பாகிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. அவர்கள் சர்வதேச நாணய நிதியம், ஆசிய வங்கி என வரிசையாகக் கடன் வாங்கினாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தாததால் சிக்கல் தீருவதில்லை. இதற்கிடையே சமீபத்தில் பாகிஸ்தான் குறித்து வெளியாகியுள்ள டேட்டா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.கடந்த மாதம் ஏற்பட்ட
�
இந்தியா பாகிஸ்தான் மோதலில்.. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிக்கை விடுத்தது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால், உள்நாட்டில் ஏதோ மோதலில் வென்றது போல ஒரு பிம்பத்தைப் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது கடன் அதிகரிப்பு ஆனால், பாகிஸ்தான் பொருளாதாரம் அந்த நாட்டின் உண்மை நிலையைக் காட்டி
�
கொடுத்துவிடுகிறது. பாகிஸ்தான் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போகிறது. பாகிஸ்தான் கடன் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதை வேறு யாரும் சொல்லவில்லை.. இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு அறிக்கையிலேயே அது தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதி நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. கழுத்தை நெரிக்கும்
�
கடன் இப்போது பாகிஸ்தானின் மொத்த கடன் (மார்ச் 2025) 76,007 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய், அதாவது 76 டிரில்லியன் பாக். ரூபாயாக இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் இந்தளவுக்கு உச்சத்தை எட்டியதே இல்லை. வரலாறு காணாத அளவுக்குப் பாகிஸ்தான் கடன் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதை இது காட்டுகிறது. இந்திய ரூபாயில் மதிப்பில் பார்த்தோம் என்றால் ரூ.23.1 டிரில்லியன்.. அமெரிக்க டாலரில் 269.344 பில்லியனாக பாகிஸ்தான் கடன் இருக்கிறது..
