ஈரானில் செயல்படும் ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் அப்பாவி மக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
அந்தவகையில் கடந்த 2018-ம் ஆண்டு இராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி இராணுவ வீரர்களை குறிவைத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இராணுவ வீரர்களும் பயங்கரவாதிகள் சிலரை கொன்றனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிகுண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
எனவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி ஈரான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
