நடக்கப்போவதை கூறும் சமல் ராஜபக்சக்களையும் அவர்களின் நெருங்கிய

279270004_2123106371204865_2434784906695569066_n.png

சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்   பொய்யான வழக்குகளைத் தாக்கல் செய்து ராஜபக்சக்களையும் அவர்களின் நெருங்கிய சகாக்களையும் சிறையில் தள்ள அநுர அரசாங்கம் அயராது பாடுபடுவதாக முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.திஸ்ஸமஹாராம வீடு
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது திஸ்ஸமஹாராமவில் உள்ள தனது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன எனத் தவறான தகவலை சமல் ராஜபக்ச அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அதற்காக அரசாங்கத்திடம் இருந்து ஒரு கோடியே 50 இலட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சமல் ராஜபக்ச அநுர அரசாங்கத்தை அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,நாம் ஊழல், மோசடிகளைச் செய்யவில்லை. அநீதிகளை இழைக்கவில்லை. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் எம்மை அர்ப்பணித்துப் பணியாற்றினோம்.

மீண்டு வருவோம்
வெளிநாடுகளின் சதி முயற்சியாலும், அன்றைய எதிரணிகளின் கூட்டு சூழ்ச்சியாலும் ஆட்சியில் இருந்து நாம் விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.இன்று இந்த அரசாங்கம், எம்மைச் சிறையில் தள்ள படாத பாடுபடுகின்றது. எம்மைச் சிறையில் அடைத்தாலும் நாம் மீண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

The current image has no alternative text. The file name is: 279270004_2123106371204865_2434784906695569066_n.png

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *