பாகிஸ்தான் கடுமையான பின்னடைவை சந்தித்தது. சீன பாதுகாப்பு

புதிய தொழில்நுட்ப ஆயுதங்களைவாங்கும் பாகிஸ்தான் இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்., சீனாவிற்கு பதிலாக வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான் இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் சீனாவிற்கு பதிலாக வேறொரு நாட்டிலிருந்து அழிவுகரமான ஆயுதங்களை வாங்க முயற்சித்துவருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் இடையேயான ஆபரேஷன் சிந்தூர் மோதலில் இந்தியாவின் மேம்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்பு முறைமைகளால் பாகிஸ்தான் கடுமையான பின்னடைவை சந்தித்தது.சீன பாதுகாப்பு அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து இருந்த பாகிஸ்தான், இப்போது துருக்கியிடம் புதிய தொழில்நுட்ப ஆயுதங்களை நாடியுள்ளது.

பாகிஸ்தான் தற்போது ASELSAN நிறுவனம் உருவாக்கிய ALP-300G எனும் உயர்தர வான்வழி பாதுகாப்பு ரேடார் அமைப்பை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்த அமைப்பு, 30 நிமிடங்களில் செயல்படுத்தக்கூடியதாகவும், பல விமானங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கக்கூடிய திறனுடையதாகவும் உள்ளது.

AESA மற்றும் digital beamforming தொழில்நுட்பங்களை கொண்ட ALP-300G, stealth விமானங்கள், ballisic ஏவுகணைகள் உள்ளிட்ட பலவிதமான எதிரிகள் மீது கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

மேலும், இந்த அமைப்பு NATO பாணியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய, இத்தகைய முன்னேற்றங்களை கவனித்து தங்களது ராணுவ உத்திகளை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது.

பாகிஸ்தானின் இந்த புதிய முயற்சி, எதிர்கால மோதல்களில் அதனை ஒரு புதிய ரீதியில் எதிர்நோக்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *