கடல் இல்லாத நாடாக மாறப்போகும் உக்ரைன் ரஷ்யா பிளான் இதுதான்

befunky-collage-2025-06-08t102035-008-1749358302.jpg

நேட்டோவில், உக்ரைன் இணைய   மேற்கொண்ட முயற்சிகள்தான் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 2.5 லட்சம் வீரர்களை பலி கொடுத்தும், டிரம்ப் தலையிட்டு மத்தியஸ்தம் செய்து வைத்தும் கூட, போரை நிறுத்த ரஷ்யா தயாராக இல்லை. இதற்கான காரணம் என்ன? புதினுக்கு என்னதான் வேணும்? எப்போது இந்தபோர் நிற்கும் என்பது பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.போருக்கான காரணம் நேட்டோவில், உக்ரைன் இணைய

மேற்கொண்ட முயற்சிகள்தான். ஆனால் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவின் நோக்கம் மாறியது. அதாவது, உக்ரைனின் நான்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும். பேச்சுவார்த்தை வரும்போது இந்த நான்கு மாநிலங்களையும் ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புதினின் நோக்கமாக இருந்தது டிரம்ப் பஞ்சாயத்து பேச தொடங்கியபோது கூட இதைத்தான் தெரிவித்திருந்தார். அதாவது, ஆனது ஆகிபோச்சு! இனி உக்ரைன்-ரஷ்யா அன்னம் தண்ணீ பழக கூடாது. ரஷ்யா

ஆக்கிரமித்த உக்ரைனின் பகுதிகள் ரஷ்யாவுக்கே சொந்தம். இதெற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் போரை நிறுத்திவிடலாம்” என்று டிரம்ப் கூறியிருந்தார். பஞ்சாயத்து பேச கூப்பிட்டா, ரஷ்யாவுக்கு சப்போர்ட்டாக டிரம்ப் பேசுவதா? என உக்ரைன் ஆதங்கப்பட்டது. எனவே போரை நிறுத்தவில்லை. இன்னும் தீவிரமான தாக்குதலை உக்ரைன் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, இப்போது இன்னொரு முடிவுக்கு வந்திருகிறது. அதாவது உக்ரைனை கடல் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் புதிய முடிவு. அதன்படி ‘டினிப்ரோ’ நதிக்கு கிழக்கே உள்ள அனைத்து

பகுதிகளையும் ரஷ்யா ஆக்கிரமிக்க முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் உக்ரைன் கருங்கடலிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, வெறும் நிலப்பரப்பை கொண்ட நாடாக மட்டுமே நீடிக்கும். ‘டினிப்ரோ’ உக்ரைனின் பொருளாதாரத்தின் மையமாக உள்ளது. போக்குவரத்து, விவசாயம் மற்றும் எரிசக்தி உற்பத்தி உள்ளிட்டவை இங்குதான் மேற்கொள்ளப்படுகிறது.உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரியான கர்னல் பாவ்லோ பாலிசா’ இது குறித்த கூறுகையில், “இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்

1ம் தேதிக்குள், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் என்கிற உக்ரைனிய மாநிலங்களை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், வடக்கு உக்ரைன் பகுதி வரை ஆக்கிரமிப்பு செய்து, அங்கு தனது எல்லையை நிறுவ ரஷ்யா முயல்கிறது” என்று தெரிவித்திருந்தார். இதே கருத்தை உக்ரைன் ராணுவமும் உறுதி செய்திருக்கிறது. 2026க்குள், உக்ரைனின் பாதி பகுதியை ரஷ்யா கைப்பற திட்டமிட்டிருக்கிறது என்று உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. குறிப்பாக

ஒடெசா மற்றும் மைக்கோலைவ் ஆகிய பகுதிகளை கைப்பற்றிவிட்டால், உக்ரைனை கடலிலிருந்து துண்டித்துவிடலாம். கடல் போக்குவரத்துக்கு இனி ரஷ்யாவை மட்டுமே அணுகும் வகையில் உக்ரைனை சுருக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. உக்ரைனின் மொத்த பரப்பளவு தோராயமாக 603,500 சதுர கிலோமீட்டர்கள். இதில் 336,300 சதுர கிலோமீட்டர்களை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.முதலில் ராணுவ ரீதியிலான தாக்குதலும், பின்னர் பொருளாதார ரீதியான தாக்குதலுக்கும் ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. எனவே இந்த திட்டத்திலிருந்து உக்ரைனால் தப்பிக்கவே முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

The current image has no alternative text. The file name is: befunky-collage-2025-06-08t102035-008-1749358302.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *