கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா

24-67730691d8e61.webp

உக்ரைன்-ரஷ்யா இடையே மீண்டும் கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை
இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, ரஷ்யாவும் உக்ரைனும் நேற்று துருக்கியில் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தின.

மூன்று வருட காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.உக்ரைன் ரஷ்ய விமான தளங்கள் மீது பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.அதிகாரிகள் உறுதிப்படுத்திய படி, போரில் உயிரிழந்த சுமார் 6,000 வீரர்களின் உடல்களை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டன.

மேலும், உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்த புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.இந்தக் புதிய ஒப்பந்தம் குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளம் கைதிகளை விடுவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

கடந்த காலப் பேச்சுவார்த்தைகளிலும் இரு நாடுகளும் போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

The current image has no alternative text. The file name is: 24-67730691d8e61.webp

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *