தென் மாகாணத்தில் பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும் இரு சந்தேக நபர்களின் புகைப்படங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளியிட்டு அவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் – 071-8592867 அல்லது பொறுப்பதிகாரி – 074-1357642 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவு கேட்டுகொண்டுள்ளது.
குற்ற சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட குற்றவாளிகளின் காட்சித் தரவுகளின் அடிப்படையில், குற்றப் பதிவுப் பிரிவின் ஆதரவுடன், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறித்த படங்கள் உருவாக்கப்பட்டன என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
