ட்ரோன் தாக்குதலை நேற்று ரஷ்யா 40 போர் விமானங்கள் அழிப்பு

24-66d24d674c22f.webp

இந்த தாக்குதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ட்ரோன் தாக்குதலை நேற்று 01 நடத்தியிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று (03) இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஆபரேஷன் ஸ்பைடர் வெப் ‘ (பாவுடின்) என்ற பெயரில், உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) இந்த மெகா நடவடிக்கையை மிகவும் இரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பெலாயா (கிழக்கு சைபீரியா), பின்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக்கில் உள்ள ஒலென்யா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட பல முக்கிய ரஷ்ய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல்களில் 40இற்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 அணுகுண்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.

The current image has no alternative text. The file name is: 24-66d24d674c22f.webp

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *