இன்றைய தினம் 01 நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

1717233003-library-2.jpg

44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் (01) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண நூலகத்தில், மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் , மாநகர சபை ஆணையாளர் பொது நூலக நூலகர் , நூலக உத்தியோகஸ்தர்கள் , வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது.

அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது.பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன.

The current image has no alternative text. The file name is: 1717233003-library-2.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *