டிரம்புக்கு பச்சை கொடி 5 லட்சம் பேரை வெளியேற்றும்

115223192_f20f4003-1170-4dbf-9efc-f0f917e5bc2c.jpg.webp

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் 5 லட்சம் பேரை வெளியேற்றும் அமெரிக்கா டிரம்புக்கு பச்சை கொடி எந்த நாட்டினருக்கு அதிக பாதிப்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை டொனால்ட் டிரம்ப் வெளியேற்றி வருகிறார். மேலும் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு தான்

முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது 5 லட்சம் பேரை அமெரிக்காவில் இருந்து டிரம்ப் வெளியேற்ற பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுவேன். அமெரிக்கர்களுக்கு வேலையை உறுதி செய்வேன் என்று கூறினார்.அதன்படி டிரம்ப்

பதவியேற்றதுமே அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்த பல்வேறு நாட்டு மக்களை நாடு கடத்தினார். இதில் நம் நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர். அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் கை, கால்களில் சங்கிலிப்போட்டு அவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். இது ஒருபுறம் இருக்க தற்போது அமெரிக்காவில் வசிக்கும் 5 லட்சம் அகதிகளை டிரம்ப் நாடு கடத்த உள்ளார். அமெரிக்காவை எடுத்து கொண்டால்

ஒவ்வொரு ஆண்டும் அகதிகளாக ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இவர்கள் 2 ஆண்டு வரை அங்கி தங்கியிருந்து பணியாற்ற முடியும். அமெரிக்காவில் பரோல் புரோகிராம் என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டம் என்பது வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருவோருக்கு இடம் அளிக்கும் திட்டமாகும். இந்த திட்டம் மாதம் 30 ஆயிரம் பேர் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கிறது. இவர்கள் 2

ஆண்டு வரை தங்கியிருந்து பணியாற்ற முடியும். அதன்பிறகு நாடு திரும்ப வேண்டும்.அமெரிக்கா – மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது . இதனை குறைக்க வேண்டும் என்பதற்காக முந்தைய அதிபர் ஜோ பைடன் பரோல் திட்டத்தை தொடங்கினார். கியூபா, ஹைட்டி, நிகரகுவா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தான் இப்படி அதிகமாக அமெரிக்காவில் உள்ளனர். இதனால்

அந்த 4 நாடுகளை சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவிட்டது. இதனால் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் வரை நாடு கடத்தப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

The current image has no alternative text. The file name is: 115223192_f20f4003-1170-4dbf-9efc-f0f917e5bc2c.jpg.webp

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *