விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் லொத்தர் சபையின் பணிப்பாளர்

download-6.jpeg

லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில் அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் திசித ஹல்லோலுவ, ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 02 ஆம் திகதி ஹல்லோலுவ, தேசிய லொத்தர் சபையின் பதில் பணிப்பாளராகப் பதவி வகித்த காலத்தில் 470,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.எனினும், அவர் இன்று அதே வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், இந்த மாதம் நாரஹென்பிட்டி பகுதியில் ஹல்லோலுவ மற்றும் அவரது சட்டத்தரணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

The current image has no alternative text. The file name is: download-6.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *