38 வயதுடைய இத்தாலி பிரஜை பொம்மைக்குள் இருந்த 10 கிலோ கோகைன் இத்தாலி பிரஜை கைது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று (05) அதிகாலை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 10 கிலோ 323 கிராம் கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த போதைப்பொருளை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலி பிரஜையாவார்.
சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று டெடி பியர் Teddy Bear பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
