நடிகர் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்

1360067.jpg

கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. நடிகர் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார்.கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்பகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு மிக நீண்ட

வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல்ஹாசன்) தெரியாது.” என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பெலகாவி உள்ளிட்ட சில இடங்களில் கமல்ஹாசனின் சுவரொட்டிகளை எரித்து, அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். தனது கருத்துக்காக அவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மன்னிப்பு கேட்கத் தவறினால், கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

கன்னட மொழியை அவமதித்த நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பாவும் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம்.

இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது. கன்னடம் உலகில் மிகவும் மதிக்கப்படும் மொழி என்பதை கமல்ஹாசன் போன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட, மதவெறிபிடித்த நபர்கள் குறைந்தபட்சம் புரிந்துகொள்ள வேண்டும். கன்னட படங்களிலும் நடித்த கமல்ஹாசன், கன்னட மக்களின் தாராள மனப்பான்மையை மறந்துவிட்டு, தனது நன்றியற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியாவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக இந்து மதத்தையும் மத உணர்வுகளையும் தொடர்ந்து அவமதித்து வருகிறார். தற்போது, ​​6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையைப் புண்படுத்துவதன் மூலம் கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னடர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

பின்னணி என்ன?: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார்.

The current image has no alternative text. The file name is: 1360067.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *