திமிங்கில வாந்தியுடன் அம்பர் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (25) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டம் வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவின்ன பிரதேசத்தில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளன பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் வத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
