வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வவுனியா மாவட்டம் உள்ளடக்கப்படவில்லை.
இதன்படி, வடக்கு மாகாணத்தின் கரையோர பிரதேசங்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பது தெளிவாகின்றது.
தமிழ் மக்கள் மீண்டும் உரிமைக்காக போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு கரையோர பிரதேசங்கள் மூலமே ஆயுதங்கள் விநியோகிக்கப்படும்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இந்த காணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இது மக்களின் காணிகளை பறிப்பதற்கான ஒரு திட்டமே என அவர் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சி,
