இலங்கை புலனாய்வு துறை தமிழர் பிரதேசங்களை தொடர்ச்சியாக கண்காணித்தபடி உள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவான சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அனைவரும் கூறிய ‘ஒரே இலங்கையர்’ என்ற சொல் சாதாரணமாக உடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எந்த விதத்திலும் தமிழர்கள் எழுச்சிகொள்ள கூடாது என இலங்கை புலனாய்வு துறை தமிழர் பிரதேசங்களை தொடர்ச்சியாக கண்காணித்தபடி உள்ளதாகவும் அவர் கூறினார்.இதனடிப்படையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் தமிழர் எழுச்சியை தடுப்பதற்காக இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இணைய முடக்க(Jammer) தாக்குதல் குறித்து கலாநிதி அருஸ்
