சேலம் ஏற்காட்டில் இன்று மாலை கோடை விழா கோலாகலமாக துவங்குகிறது… தமிழகத்தின் 3 அமைச்சர்கள் இந்த விழாவை துவக்கி வைக்கிறார்கள்.. அத்துடன் , பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்க உள்ளனர்.. இன்று ஏற்காட்டில் 48வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சியை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து
�
வருகிறார்கள்..ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி இன்று வெள்ளிக்கிழமை துவங்கி வரும் 29ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.. இந்த விழாவை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர், இன்று மாலை 4 மணிக்கு துவங்கி
�
வைக்கின்றார்கள்.ஏராளமான நலத்திட்ட உதவிகள் பிறகு, வேளாண்மைத்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பட்டு வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவிருக்கிறார்கள். அமைசசர்களுடன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும்
�
பங்கேற்கின்றனர். இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் இந்த கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறிக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.. மேலும், 25,000க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகளை கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல, வனவிலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு
�
வடிவமைப்புகள் வண்ண வண்ண பூக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.அதேபோல, ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, கோலப்போட்டி, படகு போட்டிகள் போன்றவை சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்படவுள்ளன. இதனை தவிர, செல்லப் பிராணியான நாய்கள் கண்காட்சி, கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் உட்பட ஏராளமான கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.ஸ்பெஷல் பஸ்கள் இன்று மலர்கண்காட்சி என்பதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில்
�
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இன்று முதல் 1 வாரத்துக்கு ஏற்காட்டிற்கு மேலே செல்லும் வாகனங்கள், கோரிமேடு-அடிவாரம் வழியாக செல்ல வேண்டும் என்றும் ஏற்காட்டில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் கொட்டச்சேடு-குப்பனூர் வழியை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுலா பயணிகளுக்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.. தற்போதுள்ள 12 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏரி, பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட் போன்றவற்றை இணைக்கும் வகையில் இரண்டு உள்வட்ட ஸ்பெஷல் பஸ்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
