இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான்

india-pakistan-tensions-soar.png

இந்தியா பாகிஸ்தான் மோதல்.. 7வது முறையாக டிரம்ப் சொன்ன அதே பாயிண்ட் முடியல

இந்தியா பாகிஸ்தான் இடையே இம்மாத தொடக்கத்தில் மோதல் நிலவி வந்தது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிக்கை விடுத்தது. அதை இந்தியா ஏற்கவே மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த மோதலை நான் தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். இப்போது 7வது முறையாக இந்த

மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் கூறியிருக்கிறார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்திய ராணுவத்திற்கு ஆபரேஷன் சிந்தூரில் கிடைத்த வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான், அத்துமீறித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. அந்த தாக்குதல்களை முறியடிக்க இந்தியா பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்தன. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான் மோதலை முடித்துக் கொள்ளக் கோரிக்கை

விடுத்தது.டிரம்ப் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்தியாவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டது. அதாவது கடந்த மே 7ம் தேதி அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் நடந்த நிலையில், மே 10ம் தேதி இரு தரப்பு மோதல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் தான் தீர்த்தேன் என டிரம்ப் மீண்டும் கூறியிருக்கிறார். வர்த்தகம் சார்ந்து அழுத்தம் கொடுத்ததால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடிந்ததாகவும்

அவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா டிரம்பை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார். ஓவல் மாளிகையில் டிரம்ப்- சிரில் ராமபோசா சந்திப்பு நடந்த நிலையில், அப்போது தான் டிரம்ப் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். அதே கருத்து இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், “நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் என்ன செய்தோம் என்பதைப் பாருங்கள். அந்த விவகாரத்தை நாங்கள் முழுமையாகத் தீர்த்து வைத்தோம். நான் அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன்” என்றார். மேலும், அடுத்து உக்ரைன் ரஷ்யா மோதலையும் விரைவில்

முடிவுக்குக் கொண்டு வரப்போவதாகவும் குறிப்பிட்டார்.இது மட்டுமின்றி, இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய ஒப்பந்தத்தை ரெடி செய்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 7வது முறை மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதலை நான் தான் முடிவுக்குக் கொண்டு

வந்தேன் என டிரம்ப் சொல்வதும் இது முதல்முறை இல்லை.. இது தொடர்பாக டிரம்ப் பேசுவது ஏழாவது முறையாகும். சமீபத்தில் சவுதிக்கு சென்றபோதும் கூட இந்தியா அமெரிக்கா மோதலை நான் தான் முடிவுக்கு வந்திருந்தேன் எனப் பேசியிருந்தார். இப்போது ஏழாவது முறையாக டிரம்ப் மீண்டும் அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.அதேநேரம் மத்திய அரசு இந்த விவகாரத்தில் அமெரிக்கா உட்பட எந்தவொரு வெளிநாடுகளின் தலையீடுகளும் இல்லை என்பதைத் தொடர்ந்து மறுத்தே வருகிறது. மத்திய அரசு விளக்கம் இந்த வாரத் தொடக்கத்தில், வெளியுறவு செயலாளர்

விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்றக் குழுவிடம் கூட இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதை விக்ரம் மிஸ்ரி தெளிவுபடுத்தியிருந்தார். அதேநேரம் இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததை முதலில் டிரம்ப் தான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார். அது தொடர்பான கேள்விக்கு அமெரிக்காவுடன் நடந்த உரையாடல்கள் வழக்கமானவை தான் என்று கூறியிருந்தார்.

The current image has no alternative text. The file name is: india-pakistan-tensions-soar.png

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *