பாகிஸ்தான் பள்ளிப் பேருந்தில் குண்டுவெடிப்பு – குறைந்தது ஐந்து பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பள்ளிப் பேருந்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். சுமார் 40 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து உள்ளூர் நேரப்படி காலை 07:40 மணியளவில் வெடித்ததாக காவல் துறை பிபிசியிடம் தெரிவித்தது. மேலும், கொல்லப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் குழந்தைகள் என்று தெரிவித்தது.
