பிரித்தானியாவும் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் நுழைவது, இலங்கைக்கு பெரும்

25-681a5e66ef035.jpeg

பிரித்தானியாவுடன் சர்வதேச வர்த்தக்கத்தில் கைகோர்த்த இந்தியா இலங்கைக்கு பாரிய சவால் இந்தியாவும் – பிரித்தானியாவும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் நுழைவது, இலங்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் விடயமாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூகப் பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு செய்யும் அமைப்பு ஒன்றினால் குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய வரி விதித்த பின்னணியில், கடந்த மே 6 ஆம் திகதி இந்தியாவும் பிரித்தானியாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பிரித்தானியாவானது இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகும்.ஏற்றுமதி வருவாய்
2024 ஆம் ஆண்டில், பிரித்தானியாவிற்கான நாட்டின் ஏற்றுமதி வருவாய் 903.72 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கருதப்படுகிறது.

எனவே, இலங்கை இந்தியாவைப் பின்பற்றி ஐக்கிய இராச்சியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபடவில்லை என்றால், இலங்கை எதிர்காலத்தில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் முதல் பெரிய ஏற்றுமதி இலக்கு அமெரிக்கா ஆகும். இரண்டாவது பிரித்தானியா, மற்றும் மூன்றாவது நாடு இந்தியா.மேலும், ஜெர்மனி இலங்கையின் நான்காவது பெரிய ஏற்றுமதி இடமாக மாறியுள்ளது. நமது நாட்டின் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இத்தாலி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்த ஐந்து நாடுகளில் மூன்று ஐரோப்பாவிலும் மற்றொன்று அமெரிக்காவிலும் உள்ளன. ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த ஐந்து நாடுகளில் இந்தியா மட்டுமே உள்ளது.

எனவே, சர்வதேச வர்த்தக மேலாண்மையை மேலிருந்து கீழாக சிந்திக்கக்கூடாது என்றும், மேலும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின்படி செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் இல்லையென்றால், நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு செய்யும் அமைப்பு இலங்கையை எச்சரித்துள்ளது.

The current image has no alternative text. The file name is: 25-681a5e66ef035.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *