டிரம்ப் ரூ.250 லட்சம் கோடி ஒப்பந்தம், கத்தார் அமெரிக்கா இடையே கையெழுத்திடப்பட்டது.
மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று கத்தார் வந்தடைந்தார். கத்தாரின் அமீர் தமீம் பின் ஹமாத் அல்தானி, டோஹா விமான நிலையத்திற்கே சென்று டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்தார்.
இந்த சந்திப்பில், கத்தாருடன் குறைந்தது ரூ.250 லட்சம் கோடி மதிப்புள்ள வர்த்தகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அமெரிக்க நிறுவனமான போயிங்கிடமிருந்து 160 விமானங்களை வாங்குவது உள்ளிட்ட சுமார் ரூ.43 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது. இது GE Aerospace நிறுவனத்தின் என்ஜின்கள் பொறுத்தப்பட்ட போயிங் 777X மற்றும் 787 ரக விமானங்களுக்கான ஒப்பந்தம் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
